2. தேவன் ஒருவரே


நாம் மனிதனை குறித்த தேவனுடைய சித்தத்தை அறிந்தோம் , இப்பொழுது நாம் தேவனை அறிவோம். நாம் இங்கு தேவனை அறிவோம் என்று சொன்னதினால் , நாம் முற்றிலுமாக அவரை அறியபோகிறோம் என்று சொல்லவரவில்லை , ஏனென்றால் நித்திய மகிமையை உடைய தேவனை தற்போது அநித்திய மகிமையை உடைய மனிதன் அறிந்துகொள்வது கூடாத காரியம். வேதமும் அப்படியே நமக்கு சொல்கிறது “ஒருவன் தேவனை அறிந்திருக்கிறேன் என்று சொன்னால் இன்னும் அவன் அறிய வேண்டியபடி அவரை அறியவில்லை.” “உன் நினைவுகள் என் நினைவுகளும் அல்ல , உன் வழிகள் என் வழியும் அல்ல, பூமியை காட்டிலும் வானம் எப்படி உயந்திருகிறதோ , அப்படியே உன் நினைவுகளை காட்டிலும் என் நினைவுகளும் உன் வழியைக்காட்டிலும் என் வழியும் உயர்ந்திருக்கும்.”. மேலும் “பிதாவாகிய தேவனாகிய உம்மையும் , அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” என்று வேதம் நமக்கு சொல்கிறது. அதினால் மனுஷன் தம்முடைய சுய முயற்சியினாலும் (நீதியினாலும்) , பலத்தினாலும் நித்தியஜீவனை (இரட்சிப்பை) அடைவது என்பது கூடாத காரியம். மேலும் இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கையில், ஒரு மனுஷன் “பின்பு யார் இரட்சிக்கப்பட கூடும் என்று அவரிடத்தில் கேட்கையில் , அவர் அதற்க்கு, இது மனுஷனால் கூடாதது தான் அனால் தேவனால் கூடும் என்றார். இதிலிருந்து மனிதனுக்கு தேவணும் அவருடைய பலமும் தேவை என்று அறிகிறோம். மேலும் அனேக வசனங்கள் வாயலாக பார்ப்போம் “உங்கள் பலத்தினாலும் அல்ல , பராக்கரமத்தினாலும் அல்ல என்னுடைய ஆவியினாலே ஆகும். “மனுஷனுடைய ஆவியை உடையவன் மனுஷனுடையவைகளை அறிவான், தேவனுடைய ஆவியை உடையவன் தேவனுடயவைகளை அறிவான்.” மேலே கண்ட வசனத்தில் பிதாவாகிய தேவனையும் மற்றும் அவருடைய குமரன் இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் என்று கண்டோம். இங்கு தேவனுடைய ஆவி (பரிசுத்த ஆவியானவர்) இல்லாமல் தேவனை அறியமுடியாது என்று கண்டோம். இதிலிருந்து முடிவாக மனிதன் இரட்சிப்பு (நித்தியஜீவன்) அடைய இம்மூவரும் அவசியம், இம்மூவர் மட்டுமே அவசியம். இங்கு இம்மூவர் மட்டுமே அவசியம் என்று சொல்வதற்கு காரணம் , சிலர் இயேசுவின் மாம்சீக தாயாகிய மரியாளும் அவசியம் என்று எண்ணுகின்றனர். மரியாள் மாம்சீகதிர்க்கு உட்பட்டவள் , இயேசுவோ ஆவிக்கு உட்பட்டவர் மாம்சத்தில் வெளிப்பட்டார். அதினால்தான் அவர் மாமிசம் ஒன்றுக்கும் உதவாது ஆவியே உயிர்பிக்கும் என்றார். மேலும் அதினால்தான் அவர் “யார் என் தாய் , யார் எனக்கு சகோதரன் , என் வசனத்தை கேட்டு அதன்படி சேய்கிறவர்களே என்றார்.” நாம் மேற்க்கண்ட வசனத்தின் மூலம் இரட்சிப்பு (நித்திய ஜீவன்) அடைய தேவனுடைய ஆவி(பரிசுத்த ஆவியானவர்) அவசியம் என்று கண்டோம். மேலும் இயேசு கிறிஸ்து என்னுடைய வசனம் ஆவியாயும் , ஜீவனாயும் இருக்கிறது என்றார். ”அவருடைய பிதாவும் , இவர் என் நேசகுமாரன் என்றும், இவருக்கு செவிகொடுங்கள் என்றும் சொன்னார்”. அவருடைய வார்த்தைக்கு செவிகொடுத்து அதன்படியே செய்கிறவர்கள் அவருடய ஆவிக்கு உட்பட்டவர்களாய் இருக்கிறார்கள். இதெலாவற்றுக்கும் மேலாக இயேசுவின் தாயாகிய மரியாளே அவர் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்றால். மேலும் குமாரனை உடையவன் ஜீவனை உடையவனாய் இருக்கிறான் என்றும், “அவரே நான் வழியும், சத்தியமும் , ஜீவனுமாயிருக்கிறேன் என்றும் சொன்னார்” மேலும் “பிதா தம்மில்தாமே ஜீவனுடயவராய் இருக்கிறது போல , குமரனும் தம்மில்தாமே ஜீவனுடயவராய் இருக்கும்படிக்கு அருள்செயிதிருக்கிறார்” என்றார்.
இதெலாவற்றிர்க்கும் மேலாக மரியாளும் அவசியம், மரியாள் மூலமாகத்தான் மனிதனுக்கு இரட்சிப்பு வருகிறது என்று சொன்னால். மரியாள் பூமியில் பிறந்ததை நற்செய்தியாக தேவதூதன் அறிவித்திருக்க வேண்டும். மேலும் வான சாஸ்திரிகள் மறியலை தொழுதுகொள்ள வந்திருக்கவேண்டும் , அல்லது மரியாளையும் , இயேசுவையும் தொழுதுகொள்ள வந்திருக்கவேண்டும். அவர்கள் இயேசுவை மட்டுமே தொழுதுகொள்ள அட்டுதொழுவத்திற்க்குள் வந்தார்கள். முடிவாக நாம் மரியாளை தொழுதுகொள்ள கூடாது. மரியாள் தெய்வம் இல்லை. சரி இப்பொழுது நாம் மரியாள் தெய்வம் இல்லை என்று அறிந்துகொண்டோம், அவர்களை நாம் தொழுதுகொள்ளகூடாது என்றும் அறிந்துக்கொண்டோம்.
ஆனாலும்கூட இன்னும் கிறிஸ்தவ சமுதாயத்தில் தேவனை தொழுதுகொள்ளும் முறை , சபையின் உபதேசத்தினாலும், பல்வேறு பிரிவுகளினாலும் வேருபடுகிரதை காண்கிறோம். சிலர் பிதாவை (யேகோவா – JEHOVAH) மட்டுமே தொழுதுகொள்ள வேண்டும் என்கிறார்கள். சிலர் இயேசு கிறிஸ்துவை (ONLY JESUS) மட்டுமே தொழுதுகொள்ள வேண்டும் என்கிறார்கள். இன்னும் சிலர் பிதாவும் குமரனும் பரலோகத்தில் இருகிறார்கள் , ஆவியானவர் மட்டுமே தற்போது நம்மோடு பூமியில் இருக்கிறார் அதினால் நாம் ஆவியானவரை மட்டுமே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறார்கள் , இது வேதத்திற்கு முரண்பாடானது.
தேவன் ஒருவாரே , அனால் மூன்று ஆள்தத்துவம் உடையவர். பிதாவை மட்டுமோ , அல்லது குமாரனை மட்டுமோ, இல்லை ஆவியானவரை மட்டுமோ தொழுதுகொல்வது தவறு. நாம் ஒருவரை விட்டு ஒருவரை தொழுதுக்கொண்டால் தேவனை நாம் தொழுதுகொள்ளும் முறை முழுமை அடையாது. “எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டு வந்தார்கள்; நீங்கள் எருசலேமிளிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ள வேண்டும் என்கிறீர்களே என்றாள். அதற்கு இயேசு: ஸ்த்ரியே நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமில் மாத்திரம் அல்ல, எங்கும் பிதாவை தொழுதுங்க்கொள்ளும் காலம் வருகிறது, நீங்கள் அறியாததை தொழுதுகொல்லுகிரீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிரத்தை தொழுதுக்கொள்கிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாக வருகிறது. உண்மையாய் தொழுதுகொல்லுகிரவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுக்கொள்ளும் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மை தொழுதுகொல்லுகிரவர்கள் இப்படிப்பட்டவர்களாய் இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாய் இருக்கிறார் ; அவரை தொழுதுகொல்லுகிரவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுக்கொள்ளவேண்டும் என்றார். அதற்க்கு அந்த ஸ்திரி அவரை நோக்கி: கிறிஸ்து எனப்படுகிற மேசிய வருவார் என்று அறிவேன், அவர் வரும்பொழுது எல்லாவற்றையும்  நமக்கு (இங்கு இயேசுவை) அறிவிப்பார் என்றாள். அதற்க்கு உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.” மேற்க்கண்ட வேத வசனங்களில் இருந்து நாம் இயேசுவே மேசிய என்றும் அவரே உலக இரட்சகர் என்றும் அறிவோம். மேலும் பிதாவை தொழுதுகொல்லுகிற நாம் அவரை ஆவியோடும் (பரிசுத்த ஆவியனவரோடும்) , உண்மையோடும் (TRUTH – JESUS CHRIST, இயேசு கிறிஸ்துவோடும்) தொழுதுகொள்ளவேண்டும் என்றார். முடிவாக நாம் மூவரும் ஒருவர் என்றும் ,மூவரும் தனித்தனியே தேவன் என்றும் , தேவன் ஒருவரே என்றும் அறிவோம். இதிலிருந்து மூவரும் தொழுகைக்கு ஊறியவரே. நாம் மூவரையும் தொழுதுக்கொள்ளவேண்டும் அப்பொழுதுதான் நாம் ஒன்றான மெய் தேவனை தொழுதுகொள்வது முழுமை அடையும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக இயேசு என்னும் நாமம் உலகிற்கு கொடுக்கப்படவில்லை, அதினால் அவர்கள் ஆபிரகாமின் தேவணும் , ஈசாக்கின் தேவணும் ,யாக்கோபின் தேவனும் என்று தொழுகையை முழுமை படுத்தினார்கள். இப்பொழுதோ குமாரனை நமக்கு வெளிபடுதிருக்கிறார். குமாரனே நமக்கு அவரை வெளிபடுத்திருக்கிறார். அதினால் இப்பொழுது மூவரும் தொழுகைக்கு ஊறியவர்களே , மூவரையும் தொழுதுகொள்ளவேண்டும், இதுவே வேதத்தின்படி சரியானது.

Comments